(சற்று சிந்தித்துப் பாருங்கள், வாழ்க்கையின் சில இரகசியங்கள் புரியும்)
''ஒருமட மாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம்தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும்அரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற -
உருவமுஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும்ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து -
மகளீர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைத்துக் கவிழிந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவு ஈரறிவு ஆகிவளர்ந்து -
ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துவாழ்ந்து மடியில்இருந்து மழலைமொழிந்து
வாஇரு போவென நாமம்விளம்ப -
உடைமணி ஆடை அரைவடம் ஆடஉண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு தெருவில் இருந்துபுழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே -
உயர் ஞான குருஉபதேசம் முத்தமிழின்கலையும்
கரைகண்டு வளர்பிறை என்றுபலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து -
மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்கொடை
கொண்டைபுனைந்து மணிபொன்இலங்கும்பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க -
மதனசொரூபன் இவன்என மோக மங்கையர்கண்டு
மருண்டு திரண்டு வரிவிழிகொண்டு சுழியஎறிந்து
மாமயில்போல் அவர்போவது கண்டு -
மனதுபொறாமல் அவர்பிறகோடி மங்கல செங்கல்
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி -
ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
வம்பில்இழந்து மதனசுகந்த விதனம், இதென்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து -
வன்மையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்துஇரு
கண்கள்இருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிராத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர்தடியும் ஆகியே -
வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்திநடந்து மதியுறம் விருந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல்மொழிந்து -
துயில்வரும் நேரம் இருமல் பொறாதுதொண்டையும்நெஞ்சும்
உலர்ந்துவறண்டு துகிலும் இழந்துசுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கலியுகமீதில் இவர்மரியாதை கண்டிடும்என்பவர்
சஞ்சலம் மிஞ்சகலகல என்றுமலசலம்வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து -
தெளிவும்இராமல் உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்துமருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து -
மறையவன்வேதன் எழுதியவாறு வந்ததுகண்டமும்
என்றுதெளிந்து இனிஎனகண்டம் இனியெனசொந்தும்
மேதின வாழ்வு நிலாதினி நின்ற -
கடன்முறை பேசும்என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டுமொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும்நேரமே -
வளர்பிறைபோல எயிறும்உரோமமும் சடையும்சிறு
குஞ்சியும்விஞ்ச மனதும் இருண்ட வடிவும்இலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து -
வலைகொடுவீசி உயிர்கொடுபோக மைந்தரும்வந்து
குனிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரே இவர்காலம் அறிந்து -
பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர்பந்தர் இடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று -
பலரையும்ஏவி முதியவர்தாமிருந்த சவம்கழுவும்
சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை -
வரிசை கெடாமல் எடுமெனஓடி வந்திளமைந்தர்
குனிந்துசுமந்து கடுகிநடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழவெனநொந்து -
விறகிடைமூடி அழல்கொடுபோட வெந்துவிழுந்து
முறிந்துநிணங்கள் உருகிஎலும்பு கருகிஅடங்கி
ஓர்பிடிநீறும் இலாதஉடம்பை -
நம்பும் அடியேனை இனி ஆளுமே!''
- பட்டினத்தடிகளார் -
''ஒருமட மாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம்தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும்அரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற -
உருவமுஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும்ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து -
மகளீர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைத்துக் கவிழிந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவு ஈரறிவு ஆகிவளர்ந்து -
ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துவாழ்ந்து மடியில்இருந்து மழலைமொழிந்து
வாஇரு போவென நாமம்விளம்ப -
உடைமணி ஆடை அரைவடம் ஆடஉண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு தெருவில் இருந்துபுழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே -
உயர் ஞான குருஉபதேசம் முத்தமிழின்கலையும்
கரைகண்டு வளர்பிறை என்றுபலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து -
மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்கொடை
கொண்டைபுனைந்து மணிபொன்இலங்கும்பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க -
மதனசொரூபன் இவன்என மோக மங்கையர்கண்டு
மருண்டு திரண்டு வரிவிழிகொண்டு சுழியஎறிந்து
மாமயில்போல் அவர்போவது கண்டு -
மனதுபொறாமல் அவர்பிறகோடி மங்கல செங்கல்
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி -
ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
வம்பில்இழந்து மதனசுகந்த விதனம், இதென்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து -
வன்மையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்துஇரு
கண்கள்இருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிராத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர்தடியும் ஆகியே -
வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்திநடந்து மதியுறம் விருந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல்மொழிந்து -
துயில்வரும் நேரம் இருமல் பொறாதுதொண்டையும்நெஞ்சும்
உலர்ந்துவறண்டு துகிலும் இழந்துசுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கலியுகமீதில் இவர்மரியாதை கண்டிடும்என்பவர்
சஞ்சலம் மிஞ்சகலகல என்றுமலசலம்வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து -
தெளிவும்இராமல் உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்துமருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து -
மறையவன்வேதன் எழுதியவாறு வந்ததுகண்டமும்
என்றுதெளிந்து இனிஎனகண்டம் இனியெனசொந்தும்
மேதின வாழ்வு நிலாதினி நின்ற -
கடன்முறை பேசும்என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டுமொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும்நேரமே -
வளர்பிறைபோல எயிறும்உரோமமும் சடையும்சிறு
குஞ்சியும்விஞ்ச மனதும் இருண்ட வடிவும்இலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து -
வலைகொடுவீசி உயிர்கொடுபோக மைந்தரும்வந்து
குனிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரே இவர்காலம் அறிந்து -
பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர்பந்தர் இடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று -
பலரையும்ஏவி முதியவர்தாமிருந்த சவம்கழுவும்
சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை -
வரிசை கெடாமல் எடுமெனஓடி வந்திளமைந்தர்
குனிந்துசுமந்து கடுகிநடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழவெனநொந்து -
விறகிடைமூடி அழல்கொடுபோட வெந்துவிழுந்து
முறிந்துநிணங்கள் உருகிஎலும்பு கருகிஅடங்கி
ஓர்பிடிநீறும் இலாதஉடம்பை -
நம்பும் அடியேனை இனி ஆளுமே!''
- பட்டினத்தடிகளார் -
Thanks
ReplyDelete